‘தமிழின தலைவர்’ முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவாகும் படங்களில் கதாநாயகியாக நடிப்பவர் தமிழச்சியாக இல்லாமல் மலையாளியாகவே இருக்கிறார்கள். முதல்வரின் இன ஒற்றுமைக்கு அடையாளமாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
பெண் சிங்கம் படத்தில் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடித்தார். அடுத்து தயாராகிவரும் இளைஞன் படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் கதை மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை தழுவி எழுதப்பட்டது.
நாயகன் பா.விஜய்யின் தாயாக குஷ்பு நடிக்கிறார். ரம்யா நம்பீசனுக்கு செட்டியார் வீட்டு பெண் வேடம்.
இந்தப் படம் தவிர்த்து முறியடி, குள்ளநரி கூட்டம் என மேலும் இரு படங்களில் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன்.
Friday, June 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)