Pages

Wednesday, June 30, 2010

உடல் எடை குறைக்கும் லட்சுமிராய்

0 comments
 
ஏற்கனவே சாதா காற்றில் பறக்கும் சருகு போலதான் இருக்கிறார் த்‌ரிஷா. இருந்தும் இந்தியில் நடிப்பதால் யோகா, உடல்பயிற்சி என்று உடம்பை மேலும் இளைக்க வைத்திருக்கிறார். பாலிவுட் ரசிகர்களுக்கு சைஸ் ஸீரோ உடம்புதான் பிடிக்கும் என்பதால் இந்த கடும் இளைப்பு.

த்‌ரிஷா நிலையே இப்படியென்றால் லட்சுமிராயின் நிலை? கேள்வியே வேண்டாம், பல பத்து கிலோக்கள் அவர் குறைத்தாக வேண்டும்.

இந்திப் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் வீடு வாங்கியவர் அப்படியே உடல் இளைப்பதற்கான வேலைகளையும் தொடங்கியிருக்கிறார். தமிழில் காஞ்சனா படத்தை முடித்தால் வேறு கமிட்டெண்ட்கள் எதுவும் லட்சுமிராய்க்கு இல்லை. இந்தி ஒன்றுதான் அவரது ஒரே குறிக்கோள்.

சீக்கிரம் போட்டோசெஷன் நடத்தி பாலிவுட் நட்சத்திரங்களை கலங்கடிக்கப் போகிறாராம்.

அப்படியே எங்களையும் கொஞ்சம் கலங்கடிங்க மேடம்.
Readmore...

ரத்த ச‌ரித்திரம் ஒரு பக்கம் பஞ்சாயத்து இன்னொரு பக்கம் எகிறுது கலக்சன்

0 comments
 
விவேக் ஓபராய் நடித்திருப்பதால் ரத்த ச‌ரித்திரம் படத்தை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெளியிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர் சிலர்.

தீவிரமாக இருக்க வேண்டிய சீமானோ, தம்பி சூர்யாவுக்காக விவேக் ஓபராயை மன்னிப்பதாக பேட்டி கொடுத்து திடீர் பாதி‌ரியாகியிருக்கிறார். சீமானின் கருணையின் பெருவெள்ளம் ராஜபக்சேயை தீண்டி திருநிலைப்படுத்தினாலும் ஆச்ச‌ரியமில்லை.

இந்த‌க் குழப்படிகள் ஒருபுறமிருக்க, ரத்த ச‌ரித்திரத்தை வாங்குவதில் ஒரு போட்டியே நடக்கிறது. குறிப்பாக படத்தின் வெளிநாட்டு விநியோக உ‌ரிமைக்கு.

இங்கிலாந்து, அமெ‌ரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கான விநியோக உ‌ரிமை 4.5 கோடிக்கு விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. சூர்யா நடித்த ஒரு படம் இத்தனை அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore...
Monday, June 28, 2010

அனுஷ்காவுக்கு விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு

0 comments
 
தெலுங்கு படம் ஒன்றில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பூனாவில் நடக்கிறது.

மகேஷ்பாபுடன் அனுஷ்கா நடிக்கும் பாடல் காட்சிகளை பூனாவில் படமாக்கி வருகின்றனர். "சிங்கம்' படத்துக்குப் பின் தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைகளையே தேர்வு செய்து நடிக்க அனுஷ்கா விரும்புவதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது.

பூபதி பாண்டியன் இயக்கும் "வெடி' படத்துக்கு அனுஷ்காவை நாயகியாக்க பேச்சு நடக்கிறது. இதில் ஹீரோவாக விக்ரம் நடிக்கிறார். விக்ரமின் ஜோடியாக இலியானாவுக்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், அவரின் கால்ஷீட் பிரச்னை அனுஷ்காவுக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள். தமன்னாவிடமும் பேச்சு நடக்கிறது.
Readmore...
Saturday, June 26, 2010

காமசூத்ரா விளம்பரத்தில் நடித்த இந்தி நடிகை தற்கொலை

0 comments
 
மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி விவேகா பானர்ஜி. இவர் 2000 ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை முன்னணி மாடல் அழகியாக இருந்தார். ஏராளமான விளம்பர படங்களிலும், சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த காமசூத்ரா விளம்பர படம் பிரபலமானது. யா கெய்சி மொகாபத் ஹை என்ற இந்திப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மொரீசிஸ் நாட்டில் விவேகா பல ஆண்டு காலம் தங்கி இருந்தார். அதன் பிறகு மும்பை திரும்பி தனியாக வசித்து வந்தார்.

மொரீசிஸ் நாட்டில் விவேகா பல ஆண்டு காலம் தங்கி இருந்தார். அதன் பிறகு மும்பை திரும்பி தனியாக வசித்து வந்தார்.

கார் அப்பார்ட் மென்ட்டில் தங்கி இருந்தார். நேற்று அவர் தங்கி இருந்த வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் கொடுத் தனர்.

உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அவர் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். சமீப காலமாக விவேகா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Readmore...

மணிரத்னம் அமிதாப் பஞ்சாயத்து

0 comments
 
ராவணன் திரைக்கு வந்து சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் வசூல் இந்தியாவிலும் சரி வெளிநாடுகளிலும் சரி அத்தனை திருப்திகரமாக இல்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதற்கு நடுவில் அமிதாப் தனது வலைப்பூவில் ராவணன் படம் குறித்தும், அபிஷேக் பச்சனின் காட்சிகள் சரிவர எடிட் செய்யப்படாதது குறித்தும் காரமாக விமர்சித்துள்ளார்.

மணி அதற்குப் பதிலடியாக அமிதாப்பிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். அடுத்து இதற்கு பதிலாக அமிதாப் பெருசு ஏதாவது சொல்லாமல் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், மணியும் அமிதாப்பும் ராம ராவணர்களாகி சொல்லம்புகளைப் பொழிந்து கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்.
Readmore...

கார்த்தி: தமன்னாவை விட காஜல் அகர்வால் சிறந்தவர்

0 comments
 
நடிகர் கார்த்தி - நடிகை காஜல் அகர்வால் ஜோடி நடித்திருக்கும் புதிய படம் நான் மகான் அல்ல. இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நாயகன் கார்த்தி, டைரக்டர் சுசீந்திரன், தயாரிப்பாளர் ஞானவேல், ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர் காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது கார்த்தி பேசுகையில், `நான் மகான் அல்ல படத்தின் முதல் பாதி கதையை டைரக்டர் சுசீந்திரன் என்னிடம் சொன்னபோது, சிரித்துக்கொண்டே இருந்தேன். சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேனா? என்று அவரிடம் கேட்டேன். நிச்சயமாக பொருத்தமாக இருப்பீர்கள் என்று சுசீந்திரன் சொன்னார். இந்த படத்துக்காக முதல்முறையாக நான் ஒத்திகை பார்த்தேன். ஒரு வாரம் ஒத்திகை நடந்தது. இதை கதை என்று சொல்வதை விட, ஒரு இளைஞனின் வாழ்க்கை என்று சொன்னால், பொருத்தமாக இருக்கும். ஒரு நடுத்தர குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் அந்த இளைஞன். எங்கோ ஒரு மூலையில் நடக்கும் தப்பு, அவன் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. இதுதான் `நான் மகான் அல்ல' படத்தின் கதை. இந்த படத்தில் இடம்‌பெறும் காதல் காட்சிகளில் நான் ரசித்து நடித்தேன். காஜல் அகர்வால் திறமையான நடிகை. அவருக்கு இப்படம் முக்கியமான படமாக இருக்கும், என்றார்.

பையா படத்தில் தமன்னாவுடன் நடித்த கார்த்தி, தமன்னாவையும் திறமையான நடிகை என்று பாராட்டினார். அதேபோல இப்போது காஜல் அகர்வாலை பாராட்டினார். இதையடுத்து நிருபர்கள் `தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய இரண்டு பேரில், சிறந்த அழகி யார்?' என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த கார்த்தி, `தமன்னாவை விட காஜல் அகர்வால் உயரமானவர். அவரை விட இவருக்கு கண்கள் பெரியவை' என்றார்.இதக்கு அர்த்தம் தமன்னாவை விட காஜல் அகர்வால் சிறந்தவர் என்பதாகவும் இருக்கலாம். இருக்கலாம் இத கவனியுங்கள்
Readmore...

தமிழ் திரைப்பட வாய்ப்பு இல்லாததால் வருத்தத்தில் பிரியாமணி

0 comments
 
பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. “கண்களால் கைது செய்” படத்தில் அறிமுகமானவர். “அது ஒரு கனாக்காலம்”, “பருத்தி வீரன்”, “மலைக்கோட்டை” “தோட்டா”, “ஆறுமுகம்”, “நினைத்தாலே இனிக்கும்” போன்ற படங்களில் நடித்தார். “பருத்தி வீரன்” சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது.

ஆனாலும் கடந்த ஒரு வருடமாக தமிழில் கதாநாயகி வாய்ப்பு வர வில்லை. “ராவணன்” படத்தில் மட்டும் சிறு வேடத்தில் தலைகாட்டி விட்டு போனார்.

பிரியாமணியை இயக்குனர்களும் தயாரிப்பா ளர்களும் ஒதுக்குகிறார்கள்.

இதுபற்றி பிரியாமணி அளித்த பேட்டி வருமாறு:-

“பருத்தி வீரன்” படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டேன். அதற்காக தேசிய விருதும் கிடைத்தது. ஆனாலும் எனக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் வரவில்லை. நான் ஓரம் கட்டப்பட்டு உள்ளேன்.

தமிழ் பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்ன நினைத்து இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று புரிய வில்லை. நான் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை.

மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. “ராவணன்” படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மலையாளத்தில் வெளியான “திரக்கதா” படத்தில் எனக்கு விருது கிடைக்க வேண்டியது. சொந்த குரலில் டப்பிங் பேசாததால் அந்த வாய்ப்பை இழந்தேன். தெலுங்கு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் டப்பிங் பேச முடியவில்லை.

எல்லா நடிகைகளுமே இப்போது கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் நான் பிகினி உடையில் நடித்து விட்டேன் என்று எல்லோரும் என்னைத்தான் விமர்சிக்கிறார்கள்.

தெலுங்கில் “துரோணா” என்ற படத்தில் ஒரு கனவு காட்சியில்தான் அப்படி நடித்து இருக்கிறேன். எனது உடல் அமைப்புக்கு கவர்ச்சி உடை அணிவது பொருத்த மாக இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை.

நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் நீச்சல் உடையைத்தான் அணிய வேண்டும். சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்.

இவ்வாறு பிரியாமணி கூறினார்.
Readmore...
Friday, June 25, 2010

மன்மதன் அம்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுக்கோ செல்போன்களுக்கோ அனுமதியில்லை

0 comments
 
கமல் - த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேரும் மன்மதன் அம்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு ப்ரான்ஸ், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டிலேயே ஷ§ட் பண்ணப்பட உள்ளது. ஏற்கனவே வேண்டும் மட்டும் டிஸ்கஷன் வைத்து வேண்டும் மட்டும் கதையை செழுமைப்படுத்திய பிறகே விமானம் ஏறினாலும், சில திருத்தங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்துச் செய்து வருகிறாராம் கே.எஸ்.

வெளிநாடுகளில் படமெடுக்கும்போது சில காட்சிகள் வலைத்தளங்களில் வந்து விடுவதால் ஸ்பாட்டில் ரசிகர்களுக்கோ செல்போன்களுக்கோ அனுமதியில்லை என்று கேஎஸ் கட்டளை விதித்திருப்பதாகவும், படம் வெளியாகும்வரை எந்தக் காட்சியும் கசிந்து விடக்கூடாதென படக்குழுவினருக்கு அன்புக் கட்டளை போட்டுள்ளார்.
Readmore...

கனவுக் கன்னியாகும் கனவிலிருக்கும் அனுஷ்கா

0 comments
 
வேட்டைக்காரன் படம் தமிழில் கனவுக் கன்னி அந்தஸ்தைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்தார் அனுஷ்கா. அது புஸ்வாணமானதில் ஏமாற்றமடைந்த அனுஷ்காவுக்கு ஹரியின் சிங்கம் நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

அப்துல் கலாம் பாணியில் தமிழ்த் திரையுலகின் கனவுக் கன்னியாகும் கனவிலிருக்கும் அனுஷ்கா, தமிழின் முன்னணி வரிசையில் இடம் பிடித்திருக்கும் தமன்னா, ஸ்ரேயா போன்றோரையும் அவர்களது படங்களையும் உற்றுக் கவனித்து வருகிறார்.

யாராவது கனவுக் கன்னியாவது எப்படி என்று டியூசன் எடுத்தால் பீஸ் கட்டி சேர்ந்துவிடுவார் என்பது போல ஆர்வம் காட்டும் இந்த நாயகி, அதன் முதற்கட்டமாக சென்னைக்கு குடிவந்துவிடத் திட்டமிட்டிருக்கிறார்.
Readmore...
Thursday, June 24, 2010

Naan Mahan Alla Movie image Gallery

0 comments
 


























Readmore...

வற்புறுத்தி முத்தக் காட்சியில் நடிக்கவைத்ததால் அழுத புதுமுக நடிகை

0 comments
 
புதுமுகங்கள் பூஷன், வித்யா நாயகன், நாயகியாக நடிக்க ஆறாவது வனம் என்ற பெயரில் படம் தயா ராகியுள்ளது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி புவனேஷ் இயக்கியுள்ளார்.

இதில் ஒரு முத்தக்காட்சியில் நடிக்க வித்யாவை வற்புறுத்தினர். வித்யாவின் தாய் மாமன் போஸ் வெங்கட்டை கொல்ல அவரது காதலன் வெறியோடு வருகிறான். நாயகனின் கொலை வெறியை தணிக்கவும் போஸ் வெங்கட்டை காப்பாற்றவும் காதலனுக்கு வித்யா முத்தமிட வேண்டும் என்பது காட்சி. இதை ஆணை மலைக்கு அருகில் உள்ள டாப்ஸிலிப் பகுதி யில் படமாக்க ஏற்பாடு செய்தனர். படப்பிடிப்பை காண இரண்டாயிரம் பேர் திரண்டு நின்றார்கள்.

முத்தக்காட்சியில் நடிக்க வித்யா மறுத்தார். எவ்வளவோ கெஞ்சியும் சம்மதிக்கவில்லை. நீண்ட நேர வற்புறுத்தலுக்கு பின் வேண்டா வெறுப்பாக சம்ம தித்தார். முத்தக் காட்சியில் நடித்த பிறகு அங்கேயே உட்கார்ந்து கதறி அழ ஆரம்பித்தார். ஏன் இப்படி என்னை நடிக்க வைத்தீர்கள் என்று கோபப்பட்டார். அவரை படக்குழுவினர் சமாதானபடுத்தினர்.

கால் மணி நேரம் அழுத பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எம்.பி.ஜி. பிலிம்ஸ்இண்டர் நேஷனல் சார்பில் எஸ்.எம். தியாக ராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.
Readmore...

விஜயின் பிறந்த நாளுக்கு தங்கமோதிரம் அரசியலுக்கு ஆயத்தமா?

0 comments
 
நடிகர் விஜய் தன் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தார்.

வழக்கமாக இன்றைய ஆளும்கட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டுத்தான் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது வழக்கம்.

அதே பாணியில் பிறந்த நாள் கொண்டாடுவது தற்செயலாகவா, எதிர்கால அரசியல் பிரவேசத்தை மனதில் வைத்தா என்பது யாருக்கு தெரியும் காத்திருந்து பாப்போம் விஜயின் இந்த செயலின் பின்னனியை.
Readmore...

செல்வராகவனுக்கு பதில் கவுதம்மேனன் வருத்தத்தில் செல்வா

0 comments
 
தெலுங்கின் பிரபல கதாநாயகன் ராணாவை வைத்து ஒரே சமயத்தில் தமிழ்- தெலுங்கு இருமொழிகளிலும் ஒரு சரித்திரப் படம் தொடங்க இருந்தார் செல்வராகவன்.

இடையில் என்ன நடந்ததோ, ஹீரோவின் தந்தை அந்தப் படத்தைக் கைவிடுவதாக அறிவித்துவிட்டார். விஷயம் அத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. இயக்குநர் கவுதம்மேனன் இயக்கத்தில் ராணா நடிக்க, தமிழ் - தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க ராணாவின் தந்தை முடிவு செய்திருக்கிறார்.

தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நாயகியாக வந்த சமந்தாதான் இதிலும் நாயகி. விரைவில் படத்துக்கான போட்டோ ஷூட் நடக்க இருக்கிறது. ஏகக் கடுப்பில் இருக்கும் செல்வராகவன் வடை போச்சே என்று புலம்பாத குறைதான்.
Readmore...

த்ரிஷா: நான் கமலுடன் ஜோடியாக நடிபதற்காக சம்பளத்தை குறைதேனா!

0 comments
 
திரிஷா இந்தியில் அக்ஷய் குமார் ஜோடியாக நடித்த காட்டா மீட்டா படம் ரிலீசுக்கு தயாராகிறது. தற்போது கமலுடன் “மன்மதன் அம்பு” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்திப்படத்தில் நடிக்கவும் கமலுடன் நடிக்கவும் சம்பளத்தை குறைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது பற்றி திரிஷாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நான் சம்பளத்தை குறைத்ததாக வெளியாகும் செய்திகள் வெறும் புரளிதான் காட்டா மீட்டா படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். அவர் எனது குரு. அவர் கேட்டுக்கொண்டதால் அப்படத்தில் நடித்தேன். கமலுடன் நடிக்கவும் சம்பளம் குறைக்கவில்லை. பணத்தை நான் பொருடபாக நினைக்க வில்லை. கதை தான் முக்கியம்.

காட்டா மீட்டா படத்தில் நேர்மையான நகரசபை கமிஷனராக வருகிறேன். அக்ஷய்குமார் ரோடு காண்டிராக்டராக நடிக்கிறார். அவருக்கும் எனக்கும் கல்லூரியில் படிக்கும் போது காதல் மலரும் பிறகு சில சூழ்நிலைகளால் அது முறிந்து போகும். எங்கள் இருவருக்குமான பிரச்சினைகளே கதை. அருமையான கதை ரொம்ப ஈடுபாட்டுடன் நடித்தேன்.

மன்மதன் அம்பு படத்தில் கமல் ஜோடியானதன் மூலம் என் கனவு நிறைவேறியது. கமலுடன் தசாவதாரம், மர்மயோகி படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்துள்ளேன். மன்மதன் அம்பு படத்தில் கண்டிப்பாக நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அது நடந்து இருக்கிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் “என் ஜெஸ்ஸி கேரக்டர் சிறப்பாக அமைந்தது. இப்படத்தை இந்தியில் “ரீமேக் செய்ய இயக்குனர் கவுதம் ஏற்பாடு கள் செய்கிறார். இந்திப்படத்திலும் என்னை நடிக்க கேட்டுள்ளனர்.

இவ்வாறு திரிஷா கூறினார்.
Readmore...
Wednesday, June 23, 2010

தமிழ் தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பியிருக்கும் படம் 'தி கராத்தே கிட்'

1 comments
 
திரைக்கு வந்த சில நாட்களிலேயே தமிழ் தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பியிருக்கும் படம் 'தி கராத்தே கிட்' . ஜாக்கிஜான், வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் இருவரும் இதில் குரு சிஷ்யனாக வருகின்றனர்.

படத்துக்குப் படம் மாஸ்டர் மாஸ்டராகத் தேடி கராத்தே, குங்க்பூ பழகிவந்த ஜாக்கிஜான், இந்தப் படத்தில் கராத்தே மாஸ்டராகி பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

கலக்கலான சண்டைகளுக்குக் குறைவில்லாத படம். ஒரே நேரத்தில் ஜாக்கிஜான் ரசிகர்களையும் குழந்தைகளையும் தன் பக்கம் ஈர்த்திருக்ககிறது. தமிழ்ப்படங்கள் திரையிட்ட தியேட்டர்களைவிட இந்தப் படத்துக்கு கூட்டம் அலைமோதுவதைப் பார்த்துத்தான் இந்த வயிற்றெரிச்சல். உலக அளவில் மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலக அளவிலும் வசூலை அள்ளிக் கொட்டுகிறது.

முந்தைய ஜாக்கி படங்களின் தமிழக அளவிலான வசூலை விரைவில் இது முறியடிக்கும் என்கிறார்கள். என்ன செய்வது நம்ம ஊர் ஜாக்கிஜான்கள் சண்டை என்று சொன்னதுமே, டூப்பை வைத்து எடுத்துவிடுங்களேன் என்று சொல்பவர்களாக இருக்கிறார்களே.
Readmore...

ஆபாசத்தை விரும்பும் 10 சதவீதம் பேருக்கு மட்டும் படம் எடுத்தால் 90 சதவீதம் பேர் எப்படி வருவார்கள்

0 comments
 
இந்தி சினிமாவை குடும்பத்துடன் பார்க்கவே முடியலை. ஒரே ஆபாசம் என்று ரயில்வே முன்னாள் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் நச் கமெண்ட் அடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் சினிமா குறித்த கேள்விக்கு விரிவான பதில் அளித்துள்ளார். அதன் விவரம்:

நான் சிறு வயதில் நிறைய இந்தி படங்கள் பார்ப்பேன். அதில் மனதை வருடும் இனிய பாடல்கள், புதுப்புது கருத்துக்களை சொல்லும் கதைகள் இருந்தன. இதனால் ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும். ஆனால் சமீபகாலமாக வரும் இந்தி படங்களில் நல்ல கருத்துள்ள பாடல்களே இல்லை. இசையும் ரம்மியமாக இல்லை. நல்ல கருத்துக்களை சிந்தித்து எழுத முடியாததால் பாடல் ஆசிரியர்கள் இரட்டை அர்த்தம் மிகுந்த, ஆபாச பாடல்களை எழுதுகிறார்கள். இது சமுதாயத்தை சீர்குலைத்து விடும். இப்படிப்பட்ட பாடல்களை நாம் அனுமதிக்க கூடாது.

இதே போல் படத்தில் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை ஆபாச காட்சிகள்தான் இடம் பெறுகின்றன. ஆக்ஷன் என்ற பெயரில் வெறும் வன்முறை, வக்கிரத்தைத்தான் காட்டுகிறார்கள். இதனால் நாம் குடும்பத்துடன் சென்று இந்த படங்களை பார்க்க முடிவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் ரெயில்வே துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்தது போல் சினிமாத் துறையிலும் பல்வேறு முன்னேற்றங்களைக் கொண்டு வருவேன். காலத்திற்கேற்ற வகையில் தரமான சினிமா எடுத்தால் எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள். ஆனால் பழைய சினிமாவையும் கதைகளையும் காப்பியடித்து எடுத்தால் அதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையே போய்விடும்.

இவ்வாறு கூறிய லாலு, சினிமா ஒரு நல்ல தொழில். தற்போது அதில் திறமைசாலிகள் குறைந்து போனதால் நஷ்டத்தை சந்திக்கிறது. ஆபாசத்தை தவிர்த்து நல்ல படங்கள் எடுத்தால் கூட்டம் அதிகம் வரும். ஆபாசத்தை விரும்பும் 10 சதவீதம் பேருக்கு மட்டும் படம் எடுத்தால் 90 சதவீதம் பேர் எப்படி வருவார்கள்?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். லாலுன்னாலே நச் கமெண்ட்தான்! நம்ம வாசகர்களோட கருத்து என்ன?
Readmore...
Monday, June 21, 2010

நடிகை ஐஸ்வர்யாராய் எந்திரன் ரிலீசுக்கு பின் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்

1 comments
 
ஐஸ்வர்யாராய். அபிஷேக்பச்சன் திருமணம் 2007 ஏப்ரல் மாதம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்தார். ஹிருத்திக்ரோஷனுடன் ஜோதா அக்பர். மற்றும் சர்கார்ராஜ், ஆங்கிலத்தில் பிங்க் பாந்தர் 2 போன்றவை திருமணத்துக்கு பிறகு நடித்தவை.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ராவணன் படம் இன்று ரிலீசானது. இதே மணிரத்னம் 2006-ல் இயக்கிய குரு படத்தில் அபிஷேக்பச்சனுடன் ஐஸ்வர்யாராயும் சேர்ந்து நடித்த போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி ஜோடியாக எந்திரன் மற்றும் குஷாரிஸ், ஆக்ஷன் ரிப்ளே ஆகிய இரு இந்திப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவை ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக இறுக்கமான ஆடைகள் அணியும் அவர் ராவணன் படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சிகளில் தொழதொழ உடை அணிந்து கலந்து கொண்டார். வயிறு பெரி தாகி இருப்பதை மறைப்பதற்காகவே இத்தகு ஆடைகள் அணிவதாக கூறப்படுகிறது. ஆனாலும் வயிறு வீங்கி இருப்பது வெளியே தெரிந்தது. கர்ப்பமான தகவலை விரைவில் அறிவிக்கப் போகிறாராம். எந்திரன் ரிலீசுக்கு பிறகு பிரசவம் வரை சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போடுகிறார்.
Readmore...

ராவணன் திரைபடத்திற்கு உண்டான சோதனை

0 comments
 
மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான ராவணன் 18 -06 -10 அன்று வெளியானது. படத்தைக் காண உள்ளூ‌ரிலும், வெளியூ‌ரிலும் ரசிகர்கள் முட்டி மோதினார்கள். இந்தியிலும் இதுதான் நிலைமை.

ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?

மணிரத்னத்தின் தீவிர விசிறிகளைக் கூட திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. வழக்கம்போல ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம், ஆக்சன் காட்சிகள், பாடல் காட்சிகள் என தொழில்நுட்ப விஷயத்தில் ராவணன் மிரட்டியிருக்கிறது. ஆனால் கதை, திரைக்கதை, யதார்த்தம் இவற்றில் படம் பெருமளவு சறுக்கியிருக்கிறது.

ஓபனிங் நன்றாக இருந்தாலும் ஒரு வாரத்துக்குள் படத்தின் கலெ‌க்சன் பெ‌ரிய அளவில் பாதிக்கப்படும் என பாலிவுட் விமர்சகர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த‌க் கணிப்பும், படம் பார்த்து வரும் ரசிகர்களின் மனநிலையும் ஒன்றாக இருப்பதுதான் ராவணனின் முன்னிருக்கும் மிகப் பெ‌ரிய சவால்.
Readmore...

சிம்புவுடன் ஜோடி சேரும் தமன்னா

0 comments
 
கே.வி.ஆனந்தின் கோ படத்திலிலிருந்து சிம்பு விலகியதற்கு தமன்னாவை ஹீரோவாகப் போடாததும் ஒரு காரணம் என்று சில பத்தி‌ரிகைகள் எழுதின. இந்த குற்றச்சாற்றை சிம்பு மறுத்தார்.

தமன்னாவை சிம்பு ஹீரோயினாகப் போடச் சொன்னது உண்மையோ பொய்யோ... சிம்புவின் சீக்ரெட் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது.

லிங்குசாமியின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்துக்கு தமன்னாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகிறது. தமிழில் சிம்பு ஹீரோ. தெலுங்கில் மகேஷ்பாபு.

தமிழில் தமன்னா ஹீரோயின். தெலுங்கில்? இன்னும் முடிவு செய்யவில்லையாம். அப்படினா தமனவின் நிலை என்ன ஆகுறது

Readmore...
Saturday, June 19, 2010

காதல் தோல்வியால் திரைப்பட நாயகி தற்கொலை முயற்சி

0 comments
 
தெலுங்கு திரையுலகின் இளம் கதாநாயகி ஸ்வேதாபாசு பிரசாத். இவர் ஏற்கனவே “கொத்த பங்காரு லோகம்,” என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். அதன்பிறகு “ரைடு”, “கஸ்கோ” ஆகியபடங்களில் நடித்தார்.

ரைடு படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் ரமேஷ்வர்மாவுக்கும், ஸ்வேதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஓட்டல்களிலும் விருந்துகளிலும் சந்தித்து காதல் வளர்த்தார்கள். இவர்களது காதல் விவகாரம் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஸ்வேதா வீட்டில் காலை 8.30 மணியளவில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை குடும்பத்தினர் காப்பாற்றி விட்டார்களாம். தற்போது வீட்டிலேயே சிசிக்சை எடுத்து வருகிறார்.

இயக்குனர் ரமேஷ்வர்மாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Readmore...
Friday, June 18, 2010

ராவணன் ராவணன் ஒளிபரப்பு உ‌ரிமையை ரா‌ஜ் தொலைக்காட்சி வாங்கியது

0 comments
 
ராவணன் போன்ற பிரமாண்ட படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை வாங்குவதில் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு நடுவில்தான் கடும் போட்டியிருக்கும்.

ஆனால் இந்தமுறை போட்டியில் இன்னொரு நிறுவனமும் கலந்து கொண்டது. அது, சிறு படங்களின் ஒளிபரப்பு உ‌ரிமையை மட்டுமே வாங்கும் ரா‌ஜ் தொலைக்காட்சி.

போட்டியில் கலந்து கொண்டது மட்டுமின்றி மற்ற இரு தொலைக்காட்சிகளையும் முந்திக்கொண்டு ராவணன் ஒளிபரப்பு உ‌ரிமையை தனதாக்கிக் கொண்டுள்ளது. ஆம், ராவணன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை ரா‌ஜ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

இந்த ஜாக்பாட்டுக்கு ரா‌ஜ் தொலைக்காட்சி கொடுத்த விலை ஐந்து கோடிகள். தமிழில் தசாவதாரத்துக்கு அடுத்து அதிக விலைக்கு விற்பனையானது ராவணன் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore...

கெளதம் மேனன் படத்தை கழற்றிவிட பார்க்கும் அஜித்

0 comments
 
துரைதயாநிதி தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இதுவல்ல செய்தி!

கார் ரேஸ் என்று சொல்லிக்கொண்டு, உலகம் முழுக்க பறந்துக்கொண்டிருக்கும் அஜீத் இடையில் சென்னை வந்தார். இப்போது ஆள்அரவமே இல்லாமல் இருக்கிறார். அவருடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்கிறார்கள்.

இதனால் தயாரிப்பாளரும், இயக்குநர் கெளதம் மேனனும் அஜீத் மீது கடுங்கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வருகிறேன், வரமாட்டேன் என்று எதையும் கூறாமல் வராமல் இருக்கும் அஜீத்தை படத்தில் இருந்தே தூக்கிவிடலாமா என்றுகூட தயாரிப்பாளரும் இயக்குநரும் யோசிப்பதாகத் தகவல்.

‘அதுதானே வேணும்’ என்கிறது அஜீத் தரப்பு. காரணம் ஆரம்பத்தில் இருந்தே படம் தயாரிக்கும் நிறுவனத்தை அஜீத்துக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள்.

ஏதோ கட்டாயத்தின் காரணமாகத்தான் முதலில் அஜீத் ஒப்புக்கொண்டார், இப்படி கண்டும் காணாமல் இருந்தால் தானாகக் கடுப்பாகி தன்னை கழற்றி விடுவார்கள் என்பது அஜீத்தின் எதிர்பார்ப்பு என்கிறார்கள்!
Readmore...

ராவணன் திரை விமர்சனன்

0 comments
 
ராவணன் இது வித்யாசமான ராமாயணம்

காவல்துறையால் பாதிக்கப்பட்ட ஒரு சமுகத்திற்கும், காவல்துறைக்கும் இடையே நடக்கும் மோதலில் பகடைக்காயாய் சிக்கும் ஒரு பெண். அந்த பெண்ணாலயே அந்த மோதல் எந்த நிலையில் போய் முடிகிறது என்பதுதான் ராவணனின் கதை சுருக்கம்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் விக்ரம் காவல்துறையால் தேடப்படும் ஒரு குற்றவாளி. விக்ரமின் கொட்டத்தை அடக்க அந்த ஊருக்கு வரும் காவல்துறை அதிகாரி பிரித்திவிராஜ், அவருடைய மனைவிதான் ஐஸ்வர்யாராய்.

விக்ரமை கைது செய்ய நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் பிரித்திவிராஜ், விக்ரமின் தங்கை பிரியாமணியின் திருமணத்தின் போது, விக்ரமை தாக்குகிறார். இந்த தாக்குதலில் குண்டு அடிப்பட்டு தப்பித்து விடுகிறார் விக்ரம். அந்த நேரத்தில் விக்ரமின் தங்கை பிரியாமணியை சூரையாடுகிறது போலீஸ். இதற்கு பழிவாங்க பிரித்திவிராஜின் மனைவி ஐஸ்வர்யாராயை கடத்துகிறார் விக்ரம். கடத்தப்பட்ட மனைவியை மீட்கவும், விக்ரமை கொல்லவும் ஒரு படையுடன் காட்டுக்கு பிரப்படுகிறார் பிரித்திவிராஜ். அப்படி புறப்பட்டவர் காட்டு ராஜாவாக வளம்வரும் விக்ரமை பிடித்தாரா? இல்லையா? என்பது ஒரு புறம் இருக்க, ஐஸ்வர்யாராயை கடத்திச்சென்ற விக்ரமுக்கு ஐஸ்வர்யாராயல் ஏற்படும் மாற்றமும், அதற்கு ஐஸ்வர்யாராயின் ரியாக்சனும் படத்தை மற்றொரு பாதையில் பயணிக்க வைக்கிறது. ஒரு வழியாக
விக்ரமின் பிடியில் இருந்து வெளிவரும் ஐஸ்வர்யாராயை, பிரித்திவிராஜ் ஏற்றுக்கொண்டாரா? இல்லையா?, என்ற கேள்வியுடன் முடிகிறது இராவணன் படம்.

எந்த சினிமாத்தனமும் இல்லாமல் படம் எடுத்த எடுப்பிலே கதைக்குள் பயணிக்கிறது. காவல்துறை அதிகாரியின் மனைவி கடத்தல், அவரைத் தேடி காவல்துறை காட்டுக்குள் பயணிப்பது என்று படம் விறுவிறுப்புடன் நகர்கிறது. உயரமான அருவி, அடர்ந்த காடு, என ஒவ்வொரு காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கிறது.

சுஹாசினியின் வசனங்களில் இருக்கும் கூர்மை, அந்த வசங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளில் இல்லை. "மேல்தட்டு மக்கள் இப்படித்தான், நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள்" என்று அடிக்கடி வசனம் பேசும் விக்ரம் எப்படி இந்த நிலைக்கு வந்தார் என்பதையும் அழுத்தமாக சொல்லவில்லை. எடுத்துக்கொண்ட கதை வீரியமானதாக இருந்தாலும், திரைக்கதை அந்த வீரியத்தோடு இல்லாமல், ஐஸ்வர்யாரால் விக்ரம் ஈர்க்கப்படுவதையே மையமாகக்கொண்டு முடிகிறது.

விக்ரம் முரட்டு உடம்போடு ஒரு காளையைப்போல வளம் வருகிறார். ஆவேசமாக பேசுவது, தன் தங்கை போலீஸால் அலங்கோலப்பட்டு வரும் போது கண் கலங்குவது, அதே சமயம் ஐஸ்வர்யாராயின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு குழம்புவது என அசத்துகிறார்.

தாஜ்மாஹாலுக்கு அழகு குறைந்தாலும் குறையலாம்! ஐஸ்வர்யாராய்க்கு அழகு குறையாது போலிருக்கிறது. அப்படியே அதே ஐம்பது எடை தாஜ்மஹாலாகவே இருக்கிறார்.விக்ரமுக்கு பயப்படமால் எதிர்த்து நிற்கும் ஐஸ்வர்யா, விக்ரமின் பேச்சில் சலனம் ஏற்பட்டு அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனை பிரமாதம். அதே சமயம் மலை ஏறுவது, விக்ரமை தாக்குவது என படத்தின் மற்றொரு ஹுரோ போலவே வலம் வருகிறார்.

அமைதியான முகத்துடன் உலாவும் பிரித்திவிராஜ் எதிரிகளை வேட்டையாடும் போது ஆக்ரோசமான போலிஸாகிறார். பிரபு, கார்த்திக் என அவர் அவர் வேலைகளை சரியாக செய்யும் கதாபாத்திரங்கள். இரண்டு காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கும்படி இருக்கிறது பிரியாமணியின் கதாபாத்திரம்.
இயக்குநரின் திரைக்கதைக்கு, தங்களின் கேமராவின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ்சிவன் மற்றும் மணிகண்டன். அருவிகளின் ஆக்ரோசத்தையும், காட்டின் அபாயத்தையும் தத்ரூபமாக காட்டிய இவர்களது கேமராக்கள் ஐஸ்வர்யாராயின் அழகையும் அபாரமாக காட்டியிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி நம்மை இன்னும் இருக்கையின் நுனியில் அமர செய்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி இருந்தாலும், படத்துடன் பார்க்கும் போது இன்னும் கூடுதல் சிறப்பு பெருகிறது. பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

காவல்துறைக்கும், அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் ராவணன். இந்த கதைகளத்தை ரசிகர்களின் மனதில் பதியவைக்க இயக்குநர் மணிரத்னம் எடுத்துக்கொண்ட முயற்சியும், உழைப்பும் கதாபாத்திரங்களின் வாயிலாகவும், காட்சிகளின் வாழிலாகவும் தெரிகிறது.

சீதையை மட்டும் அல்ல ரசிகர்களின் மனதையும் கவருவான் இந்த ராவணன்.
Readmore...
Tuesday, June 15, 2010

தமன்னாவுக்கு தண்ணி தெ‌ளிப்பதில் வேகம் காட்டுகிறது கோடம்பாக்கம்

0 comments
 
ஆளே இல்லா ஊருக்கு... என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்களே. அதற்கு நூறு சதவீத பொருத்தம், தமன்னா. த்‌ரிஷா, அசின் போன்றவர்கள் இந்திப் பக்கம் ஒதுங்கியதால் கோடம்பாக்கத்தில் கொண்டாடப்பட்டவர் இவர். அந்த அதிர்ஷ்டம் இப்போது மெல்ல மெல்ல சாயம் போகத் தொடங்கியிருக்கிறது.

விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தனது சம்பளத்தை ஒரு கோடி என்று உயர்த்தினார். இந்த ஒரு கோடியில் அவர் ஸ்ட்ராங்காக உட்காரும் முன்பே ஆந்திராவிலிருந்து புயலடிக்கத் தொடங்கியது. சிங்கம் வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் முன்னணி ஹீரோக்கள். அதேபோல் ஹன்சிகா மோத்வானி காட்டிலும் அடை மழை.

ஹன்சிகா தனுஷுடன் மாப்பிள்ளை, விஜய்யுடன் வேலாயுதம் என்று டாப் கிய‌ரில் எகிறுகிறார். அசினும் காவல்காரன் படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். அ‌ஜித்தை வைத்து கௌதம் இயக்கும் படத்தில் அ‌ஜித் ஜோடியாக தெலுங்கு நடிகை சமந்தா நடிக்கலாம் என்கிறார்கள். மொத்தத்தில் தமன்னாவுக்கு தண்ணி தெ‌ளிப்பதில் வேகம் காட்டுகிறது கோடம்பாக்கம்.

ஆனால் இந்த ச‌ரிவை உணராமல் ஒரு கோடி கேட்டு அம்மணி சலம்புவதுதான் வேடிக்கை.
Readmore...