திரிஷா இந்தியில் அக்ஷய் குமார் ஜோடியாக நடித்த காட்டா மீட்டா படம் ரிலீசுக்கு தயாராகிறது. தற்போது கமலுடன் “மன்மதன் அம்பு” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்திப்படத்தில் நடிக்கவும் கமலுடன் நடிக்கவும் சம்பளத்தை குறைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது பற்றி திரிஷாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நான் சம்பளத்தை குறைத்ததாக வெளியாகும் செய்திகள் வெறும் புரளிதான் காட்டா மீட்டா படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். அவர் எனது குரு. அவர் கேட்டுக்கொண்டதால் அப்படத்தில் நடித்தேன். கமலுடன் நடிக்கவும் சம்பளம் குறைக்கவில்லை. பணத்தை நான் பொருடபாக நினைக்க வில்லை. கதை தான் முக்கியம்.
காட்டா மீட்டா படத்தில் நேர்மையான நகரசபை கமிஷனராக வருகிறேன். அக்ஷய்குமார் ரோடு காண்டிராக்டராக நடிக்கிறார். அவருக்கும் எனக்கும் கல்லூரியில் படிக்கும் போது காதல் மலரும் பிறகு சில சூழ்நிலைகளால் அது முறிந்து போகும். எங்கள் இருவருக்குமான பிரச்சினைகளே கதை. அருமையான கதை ரொம்ப ஈடுபாட்டுடன் நடித்தேன்.
மன்மதன் அம்பு படத்தில் கமல் ஜோடியானதன் மூலம் என் கனவு நிறைவேறியது. கமலுடன் தசாவதாரம், மர்மயோகி படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்துள்ளேன். மன்மதன் அம்பு படத்தில் கண்டிப்பாக நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அது நடந்து இருக்கிறது.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் “என் ஜெஸ்ஸி கேரக்டர் சிறப்பாக அமைந்தது. இப்படத்தை இந்தியில் “ரீமேக் செய்ய இயக்குனர் கவுதம் ஏற்பாடு கள் செய்கிறார். இந்திப்படத்திலும் என்னை நடிக்க கேட்டுள்ளனர்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
Thursday, June 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)