Pages

Monday, May 31, 2010

பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் திரைபடத்தின் வெற்றி கர்ஜனை

0 comments
 
இந்த வருடம் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பிய ஒரே படம், பையா. பையாவுக்குப் போட்டியாக வந்திருக்கிறது ஹ‌ரியின் சிங்கம். ஆம், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் சிங்கத்தின் வசூல் கர்ஜனைதான் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது.

அள்ளிட்டோம் அசத்திட்டோம் என்று சானல்களும், பத்தி‌ரிகைகளும் உடுக்கடித்தாலும் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்து அவர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுப்பது சில படங்கள்தான். விஜய்யின் கடைசி ஆறு படங்களால் 30 கோடி ரூபாய் நஷ்டம் என்று திரையரங்கு உ‌ரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதிலிருந்து இந்த உண்மையை ஒருவர் அறிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் அயன் படத்துக்குப் பிறகு மாபெரும் வெற்றிப்படமாக சன் பிக்சர்ஸுக்கு அமைந்திருப்பது சிங்கம் படம்தான். அளவுக்கதிகமான ஆ‌க்சன் என்று குறைபட்டுக் கொண்டாலும் வெளியான முதல் மூன்று தினங்கள் நூறு சதவீத கலெ‌க்சனை அள்ளியிருக்கிறது சிங்கம். இப்படியே போனால் அயன் படத்தின் வசூலை எளிதாக சிங்கம் முறியடிக்கும் என்கிறார்கள்.
Readmore...
Saturday, May 29, 2010

பதிக்கப்பட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு விஜயின் முடிவு

0 comments
 
விஜய்க்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் சில அதிரடி தீர்மானங்கள் எடுத்து அதை பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தெரிவிப்பதாக இருந்ததும், கடைசி நேரத்தில் எஸ்.ஏ.சி தலையிட்டு வாங்க பேசிக்கலாம் என்று அழைத்ததையும் நாம் முன்பே வெளியிட்டிருந்தோம். சுடச் சுட நடந்த அந்த பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லையாம். அதனால், முன்பே ஏற்பாடு செய்திருந்த பிரஸ்மீட்டை மீண்டும் நடத்த முடிவு செய்திருக்கிறது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். தங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட ஈடாக ஆறு கோடி ரூபாய் தர வேண்டும் என்கிறார்களாம் இவர்கள். இதற்கெல்லாம் விஜய் ஒப்புக் கொள்வாரா என்பது ஒரு புறம் இருக்கட்டும். வேறொரு நல்ல செய்தி. காவல்காரன் படத்தை முதல் பிரதி அடிப்படையில் வாங்கியிருக்கிறாராம் விஜய். தனது படங்களால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் சலுகை விலையில் படத்தை தரவே இப்படி ஒரு முடிவெடுத்தார் என்கிறார்கள் திரையுலக வட்டாரங்களில்! பாதிக்கப்பட்டவங்க நெஞ்சுல பாலை வார்த்துட்டீங்களே....
Readmore...

ரெண்டு படத்துல தொடர்து புக் செய்தால் சம்பளத்தை குறைக்க தமன்னா முடிவு

0 comments
 
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகியுள்ளார் தமன்னா. அயன் படத்தில் சூர்யாவுடனும், பையா படத்தில் கார்த்தியுடனும், சுறா படத்தில் விஜய்யுடனும் நடித்ததின் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தில்லாலங்கடி, சிறுத்தை, அருவா போன்ற படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார். படங்கள் குவிவதால் சம்பளத்தை பெருமளவு உயர்த்தியுள்ளார். ஆரம்பத்தில் ரூ. 25 லட்சம் சம்பளம் வாங்கிய அவர் இப்போது ரூ. 1-1 2 கோடி வரை கேட்கிறார் என்கின்றனர். பெரிய நடிகர்களும் தமன்னாவை ஜோடியாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வளர்ச்சியை அப்படியே தக்க வைத்துக் கொள்ள தமன்னா விரும்புகிறார். இதற்காக சம்பளத்தில் புதிய பேக்கேஜ் முறையை அறிமுகம் செய்துள்ளார். ஒரே கம்பெனி தொடர்ந்து இரு படங்களில் நடிக்க வாய்ப்பு தந்தால் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார். தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்தின் படக்கம்பெனி சொந்தமாக இரு படங்கள் தயாரிக்கிறது. அதில் ஒரு படத்தில் தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர். இன்னொரு படத்திலும் என்னையே நடிக்க வைத்தால் சம்பளத்தில் தள்ளுபடி செய்வதாக கூறினார். இதையடுத்து இரு படத்திலும் தமன்னாவை ஒப்பந்தம் செய்தனர். இதையடுத்து சம்பளத்தில் பல லட்சங்கள் தள்ளுபடி செய்துள்ளார். தமிழிலும் இது போல் ஒரே கம்பெனி இரு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் சம்பளத்தில் தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார். பொழைக்கத்தெரிஞ்ச புள்ள!
Readmore...
Friday, May 28, 2010

மதம் மாறி தனது காதலின் ஆழத்தை காட்டிய நயன்தாரா

0 comments
 
பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன.

நயன்தாராவை அடிப்பேன் என்று மிரட்டினார். கணவரை விட்டு விலகும்படி செல்போனில் எஸ்.எம்.எஸ்.களும் தொடர்ந்து அனுப்பினார். பிரபு தேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். எதுவும் பலிக்கவில்லை. மாறாக நெருக்கத்தை இருவரும் தீவிரமாக்கினர்.

பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்றார்கள். ஐதராபாத்தில் நடந்த படவிழாவுக்கு கைகோர்த்தப்படி வந்தனர். சென்னையில் ஒரே மேடையில் சேர்ந்து நடனம் ஆடி தொடர்பை வெளிப்படுத்தினார்கள். ரம்லத் சோர்வாகிவிட்டார்.

அடுத்தக்கட்டமாக இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபு தேவா தங்குகிறார். நயன்தாராவுடனான சந்திப்புகள் நட்சத்திர ஓட்டல்களிலேயே நடக்கிறது.

அவருக்கு சென்னையில் வீடு பார்த்து தங்க வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக புரோக்கர்கள் மூலம் வீடு தேடிவருகிறார். ஐதராபாத்திலும் வீடு தேடுகிறார்.

பிரபுதேவாவுக்காக மதம்மாற நயன்தாரா முடிவு செய்துள்ளார். இவரது சொந்த பெயர் டயானா மரியம் குரியன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் வைத்துக் கொண்டார்.

பிரபுதேவா மனைவி ரம்லத் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். திருமணத்துக்கு பிறகு அவர் இந்து மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் லதா என மாற்றிக்கொண்டார்.

அதுபோல் நயன்தாராவும் இந்து மதத்துக்கு மாறி பிரபுதேவாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இப்போதே படப்பிடிப்புகளின்போது அந்தந்த பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா, மதம் மாறவேண்டாம் என்று கூறினாராம். ஆனால் நயன்தாரா கேட்கவில்லை. காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறுவதில் உறுதியாக இருக்கிறாராம்.
Readmore...
Thursday, May 27, 2010

பிரிக்கும் முடிவில் மனைவி பிரிந்தால் இரக்கும் முடிவில் காதலி பிரபு- நயன்தாரா காதல்

2 comments
 
பிரபுதேவா - நயன்தாரா ஜோடி திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரமலத் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கும் நிலையில் நயன்தாராவுடன் காதல் வயப்பட்டார். நயன்தாராவும் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு ஆறுதலுக்காக பிரபுதேவாவிடம் நட்பாக பழக ஆரம்பித்து மனதை பறிகொடுத்தார். காதல் ஜோடிகளாக சென்னைக்கும், மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கும் பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்க வில்லை. இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டால், அது எங்கள் சொந்த விஷயம், பர்சனல் கேள்விகள் வேண்டாமே... என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்து விடுகிறார்கள்.


நயன்தாராவுக்கு, பிரபுதேவா வைர டாலர் பதித்த தங்க சங்கிலியை காதல் பரிசாக ‌கொடுத்தார். நயன்தாராவோ, பிரபுதேவாவின் ‌பெயரை பச்சை குத்தி காதலின் ஆழத்தை வெளிப்படுத்தினார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்‌‌போவதாகவும் அவ்வப்‌போது செய்திகள் வெளியாகி வருகின்றன.


இந்நிலையில் நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என பிரபுதேவாவின் மனைவி ரமலத் முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக தமிழ்திரையுலக முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ரமலத் முறையிட்டார். ``என்னிடம் இருந்தும், என் குழந்தைகளிடம் இருந்தும் என் கணவரை நயன்தாரா பிரித்து சென்று விடுவாரோ என்று பயப்படுகிறேன். நயன்தாராவின் பிடியில் இருந்து என் கணவரை மீட்டு, எங்களுடன் சேர்த்து வையுங்கள்'' என்று அழுதுகொண்டே கூறியிருக்கிறார். அதைக்கேட்டு உருகிப்போன அந்த பிரமுகர்கள், பிரபுதேவாவை நேரில் வரவழைத்து, பஞ்சாயத்து பேசினார்கள். அவர்களிடம் பிரபுதேவா, ``நயன்தாராவை விட்டு என்னால் பிரிய முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் நெருக்கமாகி விட்டோம். நான் கைவிட்டால்... நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார்'' என்று கூறிவிட்டாராம். இதையடுத்து பஞ்சாயத்து பேச வந்தவர்கள் நயன் - பிரபு விவகாரத்தை அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Readmore...

சம்பளத்தில் பாதியக்கிய அசின் காரணம் விஜய்

2 comments
 
நடிகர் விஜய்யுடன் நடிபதர்க்காக அசின் இந்தியில் வாங்கியதைவிட பாதியாக குறைதுள்ளராம் . அசின் பாலிவுட் பக்கம் போய் விட்டதால் மீண்டும் இந்த ஜோடி, ஜோடியாக நடித்து திரையில் தோன்ற வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால் பாலிவுட்டில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாததால் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்த அசினுக்கு விஜய்யுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தி படவுலகில் ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கிய அசின், விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பு என்பதால் தனது சம்பளத்தை ரூ.ஒன்றரை கோடியாக குறைத்துள்ளாராம். அதுவும் சரிதானே இப்போதெல்லாம் விஜய் திரைப்படம் நஷ்டத்தில் தானே ஓடிக்கொண்டிருக்கிறது என நினைத்து அம்மணி சம்பளத்தை குறைதுல்லரோ எனவோ........
Readmore...
Tuesday, May 25, 2010

திருமணத்தில் விருப்பமில்லை குழந்தை வேண்டும் நடிகை சுஸ்மிதாவின் விபரித ஆசை

0 comments
 
பாலிவுட்டை கலக்கிகொடிருக்கும் சுஸ்மிதா இப்போது இன்னும் ஒரு விஷயத்தில் நம்மை கலங்க வைக்கிறார் அதாங்க குழந்தை பெரும் விஷயத்தில். முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இது எல்லா பெண்களுக்கும் வரக்கூடிய ஆசை தானே, தாயின் மகத்துவம் அப்படி... இப்படி... என்றெல்லாம் யோசித்து விடாதீர்கள். முழு விவரம் என்னவென்றால், அம்மனிக்கு கல்யாணம் மீது நாட்டமில்லையாம். ஆனால் குழந்தை மற்றும் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். திருமணம் செய்வதெல்லாம் வேஸ்ட் என்று சொல்லும் சுஷ், தன் மனதுக்கேற்ற ஆணை இன்னும் சந்திக்கவே இல்லை என்கிறார் ஏக்கத்துடன்!. என்னை இன்னும் பர்கலன்னு நான் நினைகிறேன் தயவுசெய்து என்னோட போட்டோவ அவுங்க கிட்ட காட்டுங்க. சுஷ்மிதா ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு ஒரு குழந்தையை தத்து எடுத்தார். சமீபமாக 3 மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். இப்போது பெற்றெடுக்க ஆசைப் படுகிறார்.

Readmore...

விஜய் அசின் ரசிகர்களுக்கு தடியடி

0 comments
 
சினிமா சூட்டிங்கில் பங்கேற்க வேலூர் சென்ற அசினை பார்ப்பதற்கு முண்டியடித்த ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். விஜய் - அசின் ஜோடி நடிக்கும் புதிய படத்தின் சூட்டிங் தற்போது வேலூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக விஜய், அசின் மற்றும் படக்குழுவினர் வேலூரில் தங்கியிருக்கிறார்கள். சத்துவாச்சாரி பகுதியில் உள்ள நவீன உள் விளையாட்டரங்கில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. விஜய் - அசின் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவர்களை பார்ப்பதற்காக சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தனர். கூட்டம் அதிகமானதால் படப்பிடிப்பு குழுவினர் ரசிகர்கள் யாரையும் உள்‌ளே அனுமதிக்கவில்லை. ஆனாலும் விஜய்யையும், அசினையும் பார்த்து விட்டுத்தான் இங்கிருந்து புறப்படுவோம் என்று கூறி அங்கேயே இருந்தனர். இதையடுத்து விஜய் - அசின இருவரும் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தனர். ரசிகர்கள் உற்சாக மிகுதியால் அவர்களை நெருங்க முண்டியடித்தனர். விஜய்க்கு கை கொடுப்பதற்காக பலர் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லத்தியை சுழற்றி லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். தற்போது பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Readmore...

வேலாயுதம் திரைபடத்தில் விஜயுடன் இணைகிறார் ஹன்சிகா

0 comments
 
நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள புதிய படமான வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கப் போகிறாராம். தற்போது தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, அதனைத் தொடர்ந்து விஜய் ஜோடியாக நடிக்கிறார். பாலிவுட்டிலிருந்து டோலிவுட்டிற்கு இடம் பெயர்ந்த நாயகி ஹன்சிகா. குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து இப்போது நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வந்த தேவதையான ஹன்சிகா, தமிழிலும் ஜெயிப்பேன் என்று கூறியிருக்கிறார். இவர் பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இச் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். அவர் புக் ஆகியிருக்கும் எந்த படமும் இன்னமும் வெளியாகாத நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மட்டும் குவிந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore...
Monday, May 24, 2010

ஆபாச படம் எடுத்து மிரட்டினான் -“வீராசாமி” வில்லி நடிகை பத்மா

0 comments
 
டி.ராஜேந்தருடன் "வீராசாமி” படத்தில் நடித்தவர் பத்மா. இப்படத்தில் வில்லியாக வந்தார். பின்னர் பத்து பத்து படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு பத்மாவின் வாழ்க்கை திசை மாறியது. ஆபாசபட மிரட்டல் வழக்கில் சிக்கி கோர்ட்டு படியேறினார். தற்போது அதிலிருந்து விடுதலையாகி லஸ்யா என பெயரை மாற்றி மீண்டும் நடிக்க வந்துள்ளார். திரையுலகில் மறுபிரவேசம் பற்றி அவர் கூறுகிறார்.

பணம், பதவி இரண்டும் கொண்ட ஒரு பெரிய மனிதனின் ஆசை வார்த்தையில் மயங்கி அவருடன் பழகினேன். அவரது அன்பை உண்மை என்று நம்பினேன். ஆனால் என் இளமை, அழகு, உடல் சுகத்துக்காகத்தான் அவர் பழகினார் என்ற உண்மை தெரிய அதிர்ந்தேன்.

சினிமாக்காரி என் ஆசைநாயகியாக இருந்து கொள் என்று கேவலமாக பேசியதால் அவரை விட்டு விலகினேன். சில நாட்கள் கழித்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். அதை நம்பி மீண்டும் அவருடன் பழகினேன். ஒருநாள் என்னை வரவழைத்து நானும் அவரும் பழகிய நாட்களில் நெருக்கமாக இருந்தபோது திருட்டுத்தனமாக எடுத்த சில ஆபாச படங்களை லேப்டாப்பில் போட்டு காண்பித்தார்.

வாழ்நாள் முழுவதும் ஆசைநாயகியாக இருக்க வேண்டும். மறுத்தால் இந்த படங்களை இண்டர்நெட்டில் போடுவேன். உன் மானம் போய்விடும். பெற்றோர் தற்கொலை செய்வார்கள் என்று மிரட்டி பிளாக்மெயில் செய்தார். நான் பயப்படவில்லை. பிறகு டெலிபோனில் மிரட்டினார். அதை செல்போனில் பதிவு செய்தேன். அதுவே அவரை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க எனக்கு உதவியது. அவர் என் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து விடுதலையானேன்.

கடந்த ஆறு மாதமாக மனவேதனையாலும், மனஅழுத்தத்தாலும் வெளி உலகில் தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி அழுதேன். இப்போது அதில் இருந்து மீண்டும் விட்டேன். தற்போது புழல், மனஉறுதி, ஏழுச்சாமி, 7வது நாள் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன் என்று பத்மா கூறினார்.
Readmore...
Saturday, May 22, 2010

ராவணா திரைபடத்தின் கதை

1 comments
 
டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியிருக்கும் படம் ராவணா. இந்தி படத்தில் அபிஷேக் பச்சனும், தமிழ் படத்தில் விக்ரமும் நாயகனாக நடித்துள்ளார்கள். நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ப்ரியாமணியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தின் சூட்டிங் முடிந்து, டிரைலரும் வெளியாகி விட்ட நிலையில் கதை ராமாயணத்தின் தழுவலா, அல்லது வேறு மாதிரியானதா? என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்காமல் இருந்தது.

இப்போது ஒருவழியாக ராவணா படத்தின் கதை கசியத் தொடங்கியிருக்கிறது. ராவணா படம் ராமாயணத்தின் தழுவல் என்றெல்லாம் கூறப்பட்டாலும், அதை நேரடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் கதை அப்படி வித்தியாசமாக செல்கிறது. கதைப்படி போலீஸ் தேடுகிற குற்றவாளிதான் ஹீ‌ரோ விக்ரம். அவருக்கு வைக்கப்படும் குறியில் அவரது தங்கை ப்ரியாமணி போட்டுத் தள்ளப்படுகிறார். அந்த வெறித்தனமான கொலையை அரங்கேற்றியது போலீஸ் அதிகாரி பிருத்விராஜ். இதனால் கோபம் கொள்ளும் விக்ரம், ப்ருத்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயை கடத்திக் கொண்டு காட்டுக்குள் பதுங்குகிறார். அவரிடம் இருந்து தப்பித்து, காடு மே‌டெல்லாம் சுற்றித் திரிந்து ஒருவழியாக போலீஸ் கைக்கு கிடைக்காறார் ஐஸ். மனைவி கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டிய பிருத்விராஜ், ஐஸ்வர்யாவை சந்தேகப்படுகிறார். அவனும், நீயும் ஒண்ணா காட்டுக்குள்ள சுத்துனீங்க. நீ சுத்தமா இருக்கியான்னு தெரியணும்... என்று கேள்வி கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் ஐஸ்வர்யா ராய் எடுக்கும் முடிவுதான் கதையின் க்ளைமாக்ஸ்.
Readmore...

வாந்தி வதந்தியால் கண்ணீர் வடிக்கும் நடிகை

0 comments
 
தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என்று பெயர் பெற்ற நடிகை சமீபத்தில் ஒரு கிசுகிசு செய்தி ஒன்று வெளியானது. அதில், "ஊர் பெயர்களில் படம் எடுத்து வெற்றி பெற்ற இளைஞர்கள் குழுவுடன் குடும்பப்பாங்கான பிரபல நடிகை மிக நெருக்கமாக பழகினார். அதன் விளைவு, சில தினங்களுக்கு முன்பு அவர், வாந்தி எடுத்தாராம். அதற்கு காரணம் அவரா, இவரா? என்று இரண்டு பேர் மீது அந்த நடிகைக்கு சந்தேகம். நேரடியாக அந்த இரண்டு பேருக்குமே போன் செய்து, ``டேய் நீயா, அவனா? யாருடா `அதற்கு' காரணம்?'' என்று கூலாக விசாரித்தாராம்!, என்று கூறப்பட்டிருந்தது. இந்த வாந்தி வதந்தியை படித்ததும்தான் அம்மணியின் கண்களில் கண்ணீர் வடிந்திருக்கிறது. "நான் எல்லாரிடமும் நல்லாதான் பழகுறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று அவர் அழுததை இப்போ நினைச்சாலும் மனசெல்லாம் பதறுது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.அவர் யாருன்னு எனக்கு சத்தியமா தெரியாது சாமியோவ் . உங்களுக்கு தெரிஞ்ச எனக்கு சொல்லுங்க புன்னகை இளவரசின்னு சொல்றாங்க யாரா இருக்கும்?
Readmore...
Friday, May 21, 2010

Raththa charithram movie image Gallery (ரத்த சரித்திரம் திரைப்பட கேலரி )

0 comments
 
 

 





 



 
Readmore...
Thursday, May 20, 2010

Director S A Chandrasekar says if Artist don't act well he will slap எஸ்.ஏ.சந்திரசேகரன்: ஒழுங்கா நடிக்கலைன்னா அடிப்பேன்

0 comments
 
என்னுடைய பட கம்பெனி ஒரு மிலிட்டரி ஸ்கூல் மாதிரி. சவுக்கு வைத்துக் கொண்டுதான் நடிகர்களிடம் வேலை வாங்குகிறேன். ஒழுங்காக நடிக்கவில்லையென்றால் அடிப்பேன், என்று நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார். டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இதுவரை 65 படங்களை இயக்கியிருக்கிறார். இவரது 66வது படம் வெளுத்துக்கட்டு. தன் சொந்த வாழ்க்கையில் நடந்த அஷபவங்களையே இப்படத்தின் கதை- திரைக்கதையாக்கி இருக்கிறாராம் எஸ்.ஏ.சி.. அவரிடம் உதவியாளராக இருந்த சேனாதிபதி மகன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் கதிர், கதாநாயகி அருந்ததி, இசையமைப்பாளர் பரணி, டைரக்டர் சேனாபதி மகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது:-

இந்தக்காலத்து இளைஞர்கள் சீக்கிரமே விரக்தி அடைந்து விடுகிறார்கள். பிளஸ்2 பரீட்சையில் தோல்வி அடைந்தால், தூக்கில் தொங்குகிறார்கள். அப்பா திட்டினால், விஷம் குடிக்கிறார்கள். வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்ற உணர்வு, இளைஞர்களிடம் குறைவாக இருக்கிறது. வாழ்க்கையில், குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த படம். சின்ன வயதில், நான் ரொம்ப முரட்டுப்பயலாக இருந்தேன். ரெயிலில் டிக்கெட் எடுக்காமல்தான் சென்னைக்கு புறப்பட்டேன். திருச்சியில் இறக்கி விட்டார்கள். மறுபடியும் இன்னொரு ரெயிலில் ஏறினேன். விழுப்புரத்தில் இறக்கி விட்டார்கள். அங்கிருந்து இன்னொரு ரெயிலில் ஏறினேன். செங்கல்பட்டில் இறக்கி விட்டார்கள். அங்கிருந்து நடந்தே சென்னைக்கு வந்தேன். எங்க அம்மாவை நான் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கிறேன். அதே அம்மாவை 24 வருடங்களாக என்னுடன் வைத்து பாதுகாத்தேன். என் வீட்டில்தான் அம்மா இறந்தார். அதையெல்லாம்தான் இந்த படத்தில் வைத்து இருக்கிறேன்.

சட்டம் ஒரு இருட்டறை படத்தின் கதையை, 29 தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். போடா என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். நான் சோர்ந்து போய்விடவில்லை. 30வது தயாரிப்பாளர் வடமலை சிதம்பரத்திடம் சொல்லி, வெற்றிபெற்றேன். இதுவரை 65 படங்களை இயக்கியிருக்கிறேன். 25 படங்களை தயாரித்து இருக்கிறேன். என்னுடைய பட கம்பெனி, ஒரு மிலிட்டரி ஸ்கூல் மாதிரி. சவுக்கு வைத்துக்கொண்டுதான் நடிகர்களிடம் வேலை வாங்குகிறேன். அடிக்க வேண்டும் என்று அடிப்பதில்லை. ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் அடிக்கிறேன். நான், ஒரு குரு மாதிரி.
Readmore...

விஜய் படத்துக்கு தடை போடும் முடிவில் தியேட்டர் அதிபர்கள் சங்கம்

0 comments
 
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த படங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள். மாஸ் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் விஜயின் படங்கள் சமீப காலமாக‌ எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை வேட்டைக்காரன், சுறா என அடுத்தடுத்து வெளியான படங்களை ஆர்வமுடன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி ‌திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அதன் விளைவு... விஜய்யின் அடுத்த படத்தில் நஷ்டத்தை ஈடுகட்டும் முயற்சியிலோ அல்லது திரையரங்க உரிமையாளர்களுக்காக ஒரு படத்தை நடித்துத் தரும் முடிவிற்கோ வர வேண்டும் என தியேட்டர்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அப்படி நடித்துக் கொடுக்காவிட்டால் விஜய் படத்துக்கு தடை போடும் முடிவிலும் இருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர். இதுசம்பந்தமாக வரும் சனிக்கிழமை (22ம்தேதி) தியேட்டர் அதிபர்கள் சென்னையில் கூடி முக்கிய முடிவெடுக்கப் போகிறார்களாம். இறங்கி வருவாரா விஜய்?!
Readmore...

4 மணி நேர நடிப்பிற்கு 40 லட்சம் வாங்கிய நடிகை ஜெனீலியா

0 comments
 
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜெனிலியா விஜய் ஜோடியாக சச்சின் படத்தில் நடித்தார். சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது உத்தமபுத்திரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தி தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சம்பளம் கோடியை தாண்டியுள்ளதாம். சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் 4 மணி நேரம் நடிக்க ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெனிலியா நடிக்கும் ஆரஞ்ச் என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அங்கு வாட்ச் கம்பெனியொன்றின் நிர்வாகிகள் ஜெனிலியாவை அணுகி தங்கள் நிறுவன விளம்பர படத்தில் நடிக்க அழைத்தனர். 4 மாதங்களுக்கு படங்கள் கைவசம் இருப்பதால் நடிக்க முடியாது என்று மறுத்தார். இரண்டு மணிநேரம் மட்டும் நடித்தால் போதும் என்று வாட்ச் கம்பெனிக்காரர்கள் வற்புறுத்தினர். இயக்குனரிடம் அனுமதி பெற்று இரண்டு மணி நேரம் நடித்து கொடுத்தார். மேலும் 2 மணி நேரம் கூடுதலாக நடிக்கும்படி வாட்ச் நிறுவனம் கேட்டது, அதை ஏற்றுக்கொண்டு நடித்து கொடுத்தார். இந்த 4 மணி நேரத்துக்கு ஜெனிலியா வாங்கிய சம்பளம் ரூ.40 லட்சமாம். அப்போ! ஜெனிலியா காட்டில் நல்ல மழைன்னு சொல்லுங்க!
Readmore...

ஆதிக்கம் செலுத்தப் போறேன் : மேகா நாயர்

0 comments
 
தொடக்கம் படத்தில் நாயகிகளில் ஒருவராக வந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா நாயர். அந்த படம் ரசிகர்களால் கவனிக்கப்படாவிட்டாலும், அடுத்து நடித்த பசுபதி மே.பா.ராசக்காபாளையத்தில் முண்டு கட்டி வந்து ரசிகர்களை திண்டாட வைத்த பெருமையைப் பெற்றது இந்த கேரளத்து வண்ணத்துப்பூச்சி. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று வெட்டி பந்தா காட்டும் நாயகிகளுக்கு மத்தியில் நல்ல டைரக்டரை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்ற புதிய ‌கோணத்தில் பேசுகிறார் மேகா. ஒரு டைரக்டர்தான் தனது கதைக்கு பொருத்தமான நடிகை யார் என்பதை தேர்ந்‌தெடுக்க வேண்டும். நடிகையை தேர்ந்தெடுத்து விட்டு கதையை யோசிக்கக் கூடாது என்று சொல்லும் மேகா, தற்போது ஆதிக்கம் படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஆதிக்கம் படத்தின் டைரக்டர் அனிஷ் 23 வயது இளைஞர். எந்த டைரக்டரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் இளம் வயதிலேயே படம் இயக்கி வரும் அனிஷ் பற்றி மேகா கூறுகையில், இது இளைஞர்கள் காலம், இளைஞர்களின் உணர்வுகள் அனுபவஸ்தர்களை விட இளைஞர்களுக்குத்தான் நன்றாக தெரியும். டைரக்டர் அனிஷின் ஆதிக்கம் படத்தின் கதையும் இளைய சமுதாயத்தைப் பற்றியது. இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தவறான வழியை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள், காதல் மொழி பேசும் இளைஞன் கத்தி தூக்குவது எதனால்... என்பது போன்ற பல உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆதிக்கம்
Readmore...

முதல் முறையாக வில்லியாக நடிக்கிறார் கவர்ச்சிப்புயல் நமிதா

0 comments
 
முதல் முறையாக வில்லியாக நடிக்கிறார் கவர்ச்சிப்புயல் நமிதா. வந்தமா கவர்ச்சி உடையில் கலக்கினோமா என்றிருந்த நமிதா திடீரென்று திசை மாற காரணம், தமிழக முதல்வர் கருணாநிதிதான்! கருணாநிதியின் வசனத்தில் சுரேஷ் கிருஷ்ணா இளைஞன் படத்தை இயக்கி வருகிறார். மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகி வருகிறது. பா.விஜய் கதாநாயகனாக நடிக்க ரம்யா நம்பீஸன் கதாநாயகியாக நடிக்கிறார். பா.விஜய்யின் அம்மாவாக குஷ்பு நடிக்கிறார். இந்தப் படத்தில் வில்லி கதாபாத்திரம் ஒன்று வருகிறது. இதில் நடிக்க கேட்டதும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார் நமிதா. கருணாநிதியின் வசனத்தில் தயாராகும் படம் என்பதாலும், அப்படியொரு படத்தில் நடிப்பது பெரும் பாக்கியம் என்பதாலும் உடனே கால்ஷீட் கொடுத்ததாக சொல்லி பரவசமடைகிறார் நமிதா. கலைஞர் கதையில வில்லின்னா என்ன சும்மாவா?
Readmore...

ராவணனின் 550 கோடி வசூல் இலக்கு

0 comments
 
ராவணன் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது. 350 கோடி ரூபாய்க்கு உலகளவில் பிஸினஸ் ஆகியுள்ளது. 550 கோடி ரூபாய் வரை இப்படம் வசூல் செய்யும் என பேசப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ராவணன் படத்தை திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். ராவணன் ரீலிஸ் நாளில் எல்லா தியேட்டர்களிலும் ராணவன் மட்டுமே திரையிடப்பட இருக்கிறது. ஐங்கரன் இன்டர்‌நேஷனல் நிறுவனம் லண்டனில் தன்வசம் உள்ள தியேட்டர்கள் அனைத்தையும் ராவணனுக்காக கொடுத்துள்ளதுடன், எந்த நிபந்தனைகளும் விதிக்கவில்லை என்பது ஹைலைட். இயக்குனர் மணிரத்னத்தின் சரித்திரத்திலேயே அவர் இயக்கிய படங்களில் பட ரிலீசுக்கு பின் கதை உள்ளிட்ட எந்தவித உரிமையும் அவருக்கு கிடையாது என அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறையாகும். மொத்த உரிமையும் ரிலையன்சுக்கும், சோனி நிறுவனத்திற்கும் மட்டுமேவாம். மணிரத்னர், ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ரசூல் பூக்குட்டி என ராவணன் சம்பந்தப்பட்ட அனைவரும் உலக மார்க்கெட் உடையவர்கள் என்பதுதான் ராவணனுக்கு இத்தனை எதிர்பார்ப்பும், ஏகபோக விற்பனையும் கிடைக்க காரணமாய் இருந்திருக்கிறது
Readmore...

பிளஸ் 2 ல நம்ம கோலிவுட் நட்சத்திரங்களின் மதிப்பெண்கள்

0 comments
 
+2 ரிசல்ட் வந்தாச்சு...மாணவர்கள் ஆளாளுக்கு பொறியியல், மருத்துவம்னு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தான் இவர்கள் சாதிக்கணும். ஏற்கனவே சாதித்துவிட்ட சினிமா பிரமுகர்கள் +2 வில் என்ன மார்க் எடுத்திருப்பாங்க? அவர்களுடைய மதிப்பெண் பட்டியலும் இந்த சீஸனுக்கு வெளிவந்தாச்சு. நீங்களும் தான் தெரிஞ்சுகங்க...

முதல்ல லேடிஸ் பர்ஸ்ட்... ஓகே.

அசின் - 1116 (இம்மா மார்க் எடுத்துட்டு ஏம்மா எங்களை வதைக்க வந்த...)

த்ரிஷா - 1072 (ஏதோ கணக்கு மிஸ்ஸாகி த்தான் நீங்களெல்லாம் கோடம்பாக்கம் வந்துட்டீங்க போலிருக்கு)

காயத்திரி - 1090 - தடகள வீராங்கனை- ( ஒடும்போதும் படிச்சீங்களோ!)

இப்போ ஆண்கள்...

சூர்யா - 872 (ஆஹா...எங்க ரேஞ்சுக்கு இருக்கீங்களே. ரொம்ப சந்தோஷம்)

இயக்குநர் பாலா - 555 (அதென்னங்க த்ரிபிள் பைவ்...படிக்கும் போதே கதைக்காக ஜன்னலில் பராக்கு பார்ப்பீங்களோ)

இயக்குநர் பாண்டிராஜ் - 796 (ஏதோ பரவாயில்லை. சரியான நேரத்துல கலைத்துறை பக்கம் வந்துட்டீங்க)

இசையமைப்பளார் விஜய் ஆண்டனி - 957 ( ஏதோ சாதிக்கனும்கற வெறியிலதான் இசைப் பக்கம் வந்திருக்கீங்க...சரியா?)

ஆர்யா - 1098 ( இதாங்க நேரம்ங்கறது... இம்புட்டு எடுத்துட்டு த்ரிபிள் பைவ் பார்ட்டி சொல்ற மாதிரிதான் நடிக்க வேண்டி இருக்கு பார்த்தீங்களா?)

அம்புட்டுதாங்க.

மற்றவர்கள் மார்க் லிஸ்ட்டை முடிஞ்சா வருங்காலத்தில் போடறோம்.
Readmore...
Wednesday, May 19, 2010

இளைஞன் திரைபடத்தில் நடிக்க நமீதாவை சிபாரிசு செய்தவர் முதல்வர்

1 comments
 
இளைஞன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்கு நமீதா ஒப்பந்தம் ஆகி உள்ளார். கவர்ச்சி நிறைந்த அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகைகள் தேர்வு நடைபெற்றது. அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நமீதா சிபாசு செய்யப்பட்டார். அவரை சிபாசு செய்தது வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் கருணாநிதி தான். முதல்வரின் இந்த யோசனையை ஏற்ற இளைஞன் பட டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவும், ஹீரோ பா.விஜய்யும் நமீதாவை முடிவு செய்தனர். பின்னர் நமீதாவிடம் கதை சொல்லி, கதாபாத்திரம் பற்றியும் ஆலோசனை செய்துள்ளனர். கதையை கேட்ட நமீதாவும் உடனே ஓ.கே., சொல்லி விட்டாராம். தற்போது இளைஞன் பட சூட்டிங் நடைபெற்று வருகிறது. பட பிடிப்பு குழுவுடன் விரைவில் நமீதாவும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.மார்டின் தயாரிக்கும் இளைஞன் படத்திற்கு கலைஞர் கருணாநிதி, கதை வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore...

சரண்யா மோகன்: தொடர்ந்து கிராமத்துப் படங்களை செய்ய எனக்கு ஆர்வமில்லை

1 comments
 
யாரடி நீ மோனிகி, வெண்ணிலா கபடி குழு, ஈரம் உள்ளிட்ட பல படங்களில் அழகு தேவதையாக வலம் வந்த சரண்யா மோகனை தற்போது விளம்பரங்களில் மட்டுமே அதிகமாக பார்க்க முடிகிறது.இது பற்றி சரண்யாவிடம் கேட்டதற்கு,''தமிழில் சினிமா வாய்ப்புகள் இல்லை என்பது உண்மைதான்.​ ஆனால் மலையாளத்தில் பிஸியாக இருக்கிறேன்.​ தமிழில் கிராமத்துப் படங்களில் மட்டுமே நடிக்க அழைக்கிறார்கள்.​ தொடர்ந்து கிராமத்துப் படங்களை செய்ய எனக்கு ஆர்வமில்லை.​ அதனால்தான் விளம்பரங்களில் அதிகமாக நடிக்கிறேன்''என்கிறார்.
Readmore...

பட வாய்ப்புகள் இருந்தும் விளம்பரத்தில் ஆர்வம் காட்டும் நடிகர் சைஃப் அலிகான்

0 comments
 
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், பிரபல பாலிவுட் ஜோடி பட்டோடி-சர்மிளா தாகூர் மகனுமான சைஃப் அலிகான் தற்போது அமுல் நிறுவனம் தயாரிக்கும் உள்ளாடை விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. சன் சில்க் நிறுவனத்தின் பெரும்பாலான விளம்பரங்களில் சைஃப் அலிகான் தான் நடித்துள்ளார். பெயிண்ட், டீ, ஷாம்பூ, சிப்ஸ், செல்போன் உள்ளிட்ட விளம்பரங்களைத் தொடர்ந்து தற்போது உள்ளாடை விளம்பரத்திலும் நடித்து வருகிறார். பட வாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும் விளம்பர படங்களில் நடிப்பதிலேயே சைஃப் அலிகான் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
Readmore...