Pages

Tuesday, June 8, 2010

பறிபோன முத்தக் காட்சியையும் படுக்கையறை காட்சியையும்

0 comments
 
முன்பெல்லாம் படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்தால் மானமே போனது போல் மருகுவார்கள் இயக்குனர்களும், தயா‌ரிப்பாளர்களும். ஆனால் இன்று;...? ஏ கிடைப்பதற்காக யாகமே நடத்துகிறார்கள்.

துரோகம் நடந்தது என்ன என்று ஒரு படம். வரும் பதினொன்றாம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் கதையே படு வில்லங்கம்.

புதுமண தம்பதிகள் தாங்கள் அந்தரங்கமாக இருப்பதை சும்மா தமாசுக்காக செல்போனில் படம் பிடிக்கிறார்கள். இந்த அந்தரங்க வீடியோ ஒரு அயலான் கையில் சிக்க, புதுமண ஜோடி எப்படி சீரழிக்கப்படுகிறது என்பது கதை.

கதையே கான்ட்ரவர்ஸி என்பதால் படுக்கையறை காட்சியை கொஞ்சம் விலாவா‌ரியாகவே வைத்திருந்தார்கள் படத்தில். முத்தக் காட்சியும் மானாவா‌ரியாக உண்டு. சென்சா‌ரில் படத்தைப் பார்த்தவர்கள், இது கலாச்சாரத்தை கெடுக்கும் (ஆமா, இவங்க எடுக்கும் படத்தில்தான் தமிழனின் இரண்டாயிரம் வருட கலாச்சாரம் பொதிந்து இருக்கு) என்று கூறி படுக்கையறை காட்சியையும், முத்தக் காட்சியையும் படத்திலிருந்து எடிட் செய்திருக்கிறார்கள்.

தயா‌ரிப்பாளருக்கு பெருத்த ஏமாற்றம்தான். இருந்தாலும் ஏ சான்றிதழ் கிடைத்ததால் சற்று தெம்பாக இருக்கிறார்.

Leave a Reply